அதிகரித்துவரும் கொரோனா பரவலை அடுத்து இலங்கையின் மேலும் நான்கு பிரிவுகளுக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் சமூக முடக்கல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் கோட்டை, புறக்கோட்டை (பெற்றா), பொறள்ள, வெலிக்கட ஆகிய பகுதிகளுக்கே குறித்த சமூக முடக்கல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 06 மணி முதல் மறு அறிவித்தல் வரையில் குறித்த சமூக முடக்கல் தொடரும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்திருக்கின்றது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை